செய்திகள்
கந்திகுப்பம் அருகே கோழிகள் திருடிய வாலிபர் கைது
கந்திகுப்பம் அருகே கோழிகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள சின்ன ஒரப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இவர் தனது வீட்டின் பின்புறம் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பண்ணைக்கு வந்த வாலிபர் ஒருவர் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கோழிகளை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதைப்பார்த்த பெரியசாமி அந்த வாலிபரை பிடித்து கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரி குப்பன் தெருவைச் சேர்ந்த சுதர்சன் (21) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.