செய்திகள்
கோப்புபடம்

தேன்கனிக்கோட்டை அருகே வேன் மோதி விவசாயி பலி

Published On 2021-01-02 14:26 IST   |   Update On 2021-01-02 14:26:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே வேன் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உச்சனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது45). விவசாயியான இவர் மோட்டார் சைக்கிளில் லக்கசந்திரம் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது சாலையில் தவறி விழுந்தார். 

அப்போது பின்னால் வந்த வேன் மோதி கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News