செய்திகள்
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதி வாலிபர் பலி
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே கீழ்நெடுங்காட்டை சேர்ந்தவர் கண்ணாயிரம் மகன் அறிவானந்தம் (வயது 27). வேன் டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை காரைக்காலில் சில வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
காரைக்கால் மேற்கு புறவழிச்சாலையில் சென்றபோது எதிரே வந்த மினி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அறிவானந்தம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி வேன் டிரைவர் கீழகாசாகுடியை சேர்ந்த அமிர்தாஸ் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.