செய்திகள்
கோப்புபடம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-01 19:47 IST   |   Update On 2021-01-01 19:47:00 IST
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கந்தர்வகோட்டை கிளை தலைவர் ஷேக் முகமது தலைமை தாங்கினார். உபயதுல்லா கண்டன உரையாற்றினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விரோத மோடியை கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான கட்சி செயல் வீரர்களும், ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Similar News