செய்திகள்
கோப்புபடம்

கீரனூர் அருகே தீக்குளித்த பெண் பலி

Published On 2021-01-01 19:46 IST   |   Update On 2021-01-01 19:46:00 IST
கீரனூர் அருகே வயிறு வலி காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீரனூர்:

கீரனூர் அடுத்த நல்லபுடையான் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி சகாயமேரி (வயது 55). இவருக்கு வயிற்று வலி இருப்பதால் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்து வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். 

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சகாயமேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News