செய்திகள்
மல்லிகை பூ

கீரமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

Published On 2021-01-01 09:39 GMT   |   Update On 2021-01-01 09:39 GMT
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கீரமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலத்தில் உள்ள மலர் கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் வியாபாரிகள் பூக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

சுபதினங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். அதே போல இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கீரமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் பூக்கள் ஒரு கிலோ ரூ.ஆயிரத்திற்கும், காட்டுமல்லி கிலோ ரூ.800-க்கும், அரளி பூ கிலோ ரூ.200-க்கும், சம்பங்கி பூ கிலோ ரூ.150-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.100-க்கும் விற்பனை ஆனது. தொடர் மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைவாக உள்ளது.
Tags:    

Similar News