செய்திகள்
கோப்புபடம்

காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயியின் மோட்டார் சைக்கிளில் ரூ.72 ஆயிரம் திருட்டு

Published On 2021-01-01 15:00 IST   |   Update On 2021-01-01 15:00:00 IST
காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயியின் மோட்டார்சைக்கிளில் இருந்து ரூ.72 ஆயிரம் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்:

காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 55), விவசாயி. இவர் நேற்று மதியம் காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது நகையை ரூ.72 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். அதன்பிறகு அடகு வைத்து பெற்ற தொகையை துணிப்பையில் போட்டு, மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டு,விட்டு அருகே உள்ள கடைக்கு பழம் வாங்க சென்றார்.

பின்னர் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை காணவில்லை. அதனை மர்மநபர் யாரோ? திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணப்பையை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News