செய்திகள்
விபத்து பலி

அறந்தாங்கி அருகே டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

Published On 2020-12-30 18:39 IST   |   Update On 2020-12-30 18:39:00 IST
அறந்தாங்கி அருகே டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே சிட்டாங்காட்டையை சேர்ந்தவர் கருப்பையா (வயது 90). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சிட்டாங்காடு முருகன் கோவில் ஆர்ச் பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ் நின்றபோது, பஸ்சில் ஏற கருப்பையா குறுக்கே சென்ற போது பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News