செய்திகள்
கேஎஸ் அழகிரி

கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2020-12-29 11:41 IST   |   Update On 2020-12-29 11:41:00 IST
கொரோனா விதியை மீறியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணங்களுக்காக கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலூர்:

காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் ஏர்கலப்பை விவசாயிகள் சங்கமம் நேற்று மாலை வேலூர் மாங்காய் மண்டி அருகே நடந்தது.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம்குமார், வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கொரோனா விதியை மீறியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணங்களுக்காக கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது வேலூர் காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News