செய்திகள்
புகையிலை விற்ற 3 பேர் மீது வழக்கு
புகையிலை விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கீழ்வேளூர் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.