செய்திகள்
விபத்து

வேலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி

Published On 2020-12-27 09:16 GMT   |   Update On 2020-12-27 09:16 GMT
வேலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
வேலூர்:

வேலூரை அடுத்த அம்முண்டி மோட்டூரை சேர்ந்தவர் யோகானந்தம். இவருடைய மனைவி ஜெயப்பிரதா (வயது 29). கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரதாவை சிகிச்சைக்காக அவருடைய தம்பி, குடியாத்தம் அருகே உள்ள தட்டம்பாறை பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென விக்னேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஜெயப்பிரதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விக்னேஷ் லேசான காயமடைந்தார்.

இதை கண்ட பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயப்பிரதாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விக்னேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் விபத்து குறித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் புருஷோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News