செய்திகள்
தற்கொலை

குடியாத்தம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2020-12-26 12:24 IST   |   Update On 2020-12-26 12:24:00 IST
குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்திற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியாத்தம்:

குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் துர்கை நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அம்மணாங்குப்பம் பகுதியிலுள்ள ஒரு நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஆறுமுகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்துபோன ஆறுமுகத்திற்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர், ஆறுமுகம் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News