செய்திகள்
புகையிலை விற்ற 10 பேர் மீது வழக்கு
புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் கீழ்வேளூர், நெம்மேலி, இருக்கை, பட்டமங்கலம், தே.மங்கலம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.