செய்திகள்
கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-23 17:00 IST   |   Update On 2020-12-23 17:00:00 IST
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குற்றம் பொருத்தானிருப்பு மதகடி அருகில் சாராயம் விற்ற சங்கமங்கலம மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் (வயது20), ஆழியூர் பிரிவு சாலை அருகே சாராயம் விற்ற நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த குமரவேல் மகன் பிரபு (25) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.இதுகுறித்துகீழ்வேளூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவா்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் ெசய்தனர்.

Similar News