செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் இருந்து 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சையில் 11ஆயிரத்து 133 பேர் `டிஸ்சார்ஜ்'ஆகி உள்ளனர். தற்போது 61 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 154 ஆக உள்ளது.