செய்திகள்
நகை பறிப்பு

மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2020-12-21 09:58 IST   |   Update On 2020-12-21 09:58:00 IST
மயிலாடுதுறை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அரும்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுந்தராம்பாள்(வயது48). சம்பவத்தன்று சுந்தராம்பாள் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று வி்ட்டு வீடு திரும்பினார். ஈச்சங்குடி பாலிடெக்னிக் அருகே அவர்கள் வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆசாமி திடீரென சுந்தராம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டார். இதன்மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும்.

இது குறித்து சுந்தராம்பாள் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

Similar News