செய்திகள்
அன்னவாசல் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் சவுந்தர்யா (வயது 20). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அன்னவாசல் போலீசில் கருப்பையா கொடுத்த புகாரின் அடிப்படையில், மாயமான சவுந்தர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.