செய்திகள்
மரணம்

ஈரோடு அருகே வாய்க்காலில் மிதந்த வாலிபர் பிணம்

Published On 2020-12-05 11:21 GMT   |   Update On 2020-12-05 11:21 GMT
ஈரோடு அருகே வாய்க்காலில் மிதந்த வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோடு அருகில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் ஆண் பிணம் மிதப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்தவரின் சட்டை, பேன்ட், ஷூ ஆகியன வாய்க்காலின் கரையில் இருந்தன. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? அவர் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News