செய்திகள்
காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் சீயாட்டி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). கூலித்தொழிலாளி. மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வலி தாங்க முடியாமல் மனம் உடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார்.
அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.