செய்திகள்
கோப்புபடம்

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி கொடுக்காததால் வாலிபர் தற்கொலை

Published On 2020-11-13 11:27 GMT   |   Update On 2020-11-13 11:27 GMT
தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடை வாங்கி கொடுக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்கலவாக்கம் கிராமம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் சுனில் (வயது 19). இவர், 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார்.

இவர், தனது தந்தை பாலாஜியிடம் தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடை வாங்கி தரும்படி கேட்டார். அதற்கு அவர், தீபாவளிக்கு முந்தைய நாள் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

ஆனால் சுனில், உடனடியாக தனக்கு புத்தாடை வாங்கி தரும்படி தந்தையை வலியுறுத்தினார். மேலும் தனது தந்தை உடனடியாக புத்தாடை வாங்கி கொடுக்காததால மனமுடைந்த சுனில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News