செய்திகள்
கோப்புபடம்

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி

Published On 2020-11-09 10:50 GMT   |   Update On 2020-11-09 10:50 GMT
அறந்தாங்கி அருகே திருமணமான 11-வது நாளில் மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த தேடாக்கியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 38). இவருக்கும், வல்லத்திராகோட்டையை சேர்ந்த பவபிரியா என்பவருக்கும், கடந்த 11 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று லட்சுமணன் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்கினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 11-வது நாளில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News