செய்திகள்
கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 14 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் உத்தரவின்படி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் வேப்பனப்பள்ளி அடுத்த தீர்த்தம் கிராமத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த திம்மராஜ் (வயது 36), தேவராஜ் (25), ஜெயம்மா (60), மாரக்கா (55) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஓசூர் டவுன் சாந்தி நகர் மனோஜ் (27), பேரிகை அடுத்த செம்பட்டி நாகராஜ் (27), மத்திகிரி காடிபாளையம் சையத் சாப்ஜான் (35), பாகலூர் சூடாபுரம் முத்து (24), கந்திகுப்பம் மேல்கொட்டாய் தேவேந்திரராவ் (64), போச்சம்பள்ளி கோணானூர் பாண்டியன் (36), தளி குலுசமனப்பள்ளி சந்தோஷ்குமார் (23), கெலமங்கலம் நரப்பனட்டி ராஜப்பா (45), சிங்காரப்பேட்டை வெள்ளக்குட்டை பழனி (45), மத்தூர் எம்.ஜி.அள்ளி மகேஷ் (45) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 மதிப்பிலான 10 கிலோ 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.