செய்திகள்
மரணம்

பாகலூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலி

Published On 2020-11-09 04:05 GMT   |   Update On 2020-11-09 04:05 GMT
பாகலூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் தாலுகா பாகலூர் அருகே நந்திமங்கலம் பக்கமுள்ளது அட்டூர். இந்த ஊரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் அவரது நிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News