செய்திகள்
தற்கொலை

காஞ்சீபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-08 07:39 GMT   |   Update On 2020-11-08 07:39 GMT
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

பெரிய காஞ்சீபுரம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயிற்று வலி தாங்க முடியாத வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News