செய்திகள்
ஓசூர் அருகே பூ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
ஓசூர் அருகே பூ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி ஆனேக்கல் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). பூ வியாபாரி. கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த அவர் ஓசூர் பிருந்தாவன் நகரில் தங்கி இருந்த அறையில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். பூ வியாபாரி தற்கொலை குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.