செய்திகள்
ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-06 07:29 GMT   |   Update On 2020-11-06 07:29 GMT
காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயத்தை சீரழிக்கும் 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News