செய்திகள்
மாத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
மாத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருச்சி-புதுக்கோட்டை சாலை ஆவூர் பிரிவு ரோடு பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மாத்தூர் விவேகானந்தா நகரை சேர்ந்த டென்னிஸ் மகன் மனோகர் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி மலையாண்டி பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியை சேர்ந்த வைத்தியநாதன் (59) என்பவரை பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.