செய்திகள்
கோப்புபடம்

கறம்பக்குடி அருகே பாஜக கொடியை கழற்றி வீசிய வாலிபர் கைது

Published On 2020-11-05 14:30 GMT   |   Update On 2020-11-05 14:30 GMT
கறம்பக்குடி அருகே பாஜக கொடியை கழற்றி வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் பா.ஜ.க.எஸ்.சி, எஸ்.டி பிரிவின் சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை நேற்று முன்தினம் யாரோ கழற்றி அப்பகுதியில் வீசி சென்றிருந்தனர். இதுகுறித்து கறம்பக் குடி பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர். 

அதன்பேரில், கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த மதன் (வயது 25) என்ற வாலிபர் பா.ஜ.க. கொடியை கழற்றி வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மதனை கைது செய்த போலீசார் அவரை ஆலங்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட் டை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News