செய்திகள்
அரிமளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
அரிமளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள கல்லுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி(வயது 23). விவசாயி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி நாகலட்சுமி, மகப்பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
இந்நிலையில், மனைவியை தன் வீட்டிற்கு வருமாறு கார்த்தி அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த கார்த்தி, வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.