செய்திகள்
ஓசூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
ஓசூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் சானசந்திரம் அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்ற சுதாகர் ரெட்டி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று ஓசூர் ஹட்கோ போலீசார் ரெயில்வே நிலையம், வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரவின்குமார் (21), குச்சிகான்(எ) பூபதி(22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.