செய்திகள்
மயிலாடுதுறை அருகே விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே நெய்க்குப்பை மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவருடைய மகன் சகாபுதீன் (வயது 38) டிராக்டர் டிரைவரான இவர், விவசாயமும் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சகாபுதீன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.