செய்திகள்
வேப்பமரத்தில் பால் வடிந்த போது எடுத்த படம்.

ஈரோடு அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் மக்கள் பரவசம்

Published On 2020-10-28 09:20 GMT   |   Update On 2020-10-28 09:20 GMT
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வேப்பமரத்தின் உச்சி மரக்கிளையில் இருந்து திடீரென பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, ஈரோடு -முத்தூர் சாலையில் எம்.ஊஞ்சப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது.

இந்நிலையில் வேப்பமரத்தின் உச்சி மரக்கிளையில் இருந்து திடீரென பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இந்த தகவல் காட்சி தீ போல் பரவியது. சிறிது நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டனர்.

பின்னர் வேப்ப மரத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, மஞ்சள், சிவப்பு, குங்குமம் பூசினர். பின் வாழைப்பழம், ஊதிபத்தி கொழுத்தி தேங்காய் உடைத்து வழிபட்டனர். அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் வேப்ப மரத்தை கும்பிட்டு சென்றனர்.
Tags:    

Similar News