செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 9 பேர் மீது வழக்கு
பணம் வைத்து சூதாடிய 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே கொண்டையம்பாளையத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 9 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.33 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.