செய்திகள்
பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
சேலம் பேர்லாண்ட்ஸ் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 54). கட்டிட மேஸ்திரி. இவர் பர்கூர் அருகே உள்ள பெரியசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டின் முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் திருடி செல்ல முயன்றனர். இதை பார்த்த வாசுதேவன் மற்றும் உடன் இருந்தவர்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் பாப்பனேரி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன்களான மோகன்வேல்(22), சக்திவேல்(23) என்பதும், இருவரும் அண்ணன், தம்பி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.