செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுத்தல்படியும், தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நாகை அருகே நாகூர் கால்மாட்டு தெருவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு தனிபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்த நபரை பிடித்து நாகூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப்பை கைது செய்தனர்.