செய்திகள்
கைது

மேலப்புதனூர் அருகே சாராயம் கடத்தியவர் கைது

Published On 2020-10-26 09:26 GMT   |   Update On 2020-10-26 09:26 GMT
மேலப்புதனூர் அருகே சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரி:

நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திருக்கண்ணபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணதாசன், சம்பத் மற்றும் போலீசார் திருமருகல் ஒன்றியம் மேலப்புதனூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திசோதனை செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 110 லிட்டர் சாராயம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மேலப்பூதனூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜீவ் (வயது42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News