செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-10-23 07:45 GMT   |   Update On 2020-10-23 07:45 GMT
ஈரோடு அருகே மது விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருள் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் நின்று கொண்டு மது விற்ற ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த சரவணன் (26) என்பவரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News