செய்திகள்
நீரில் மூழ்கி பலி

சோமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2020-10-20 09:31 GMT   |   Update On 2020-10-20 09:31 GMT
சோமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் நந்தவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 33). இவர் சென்னை கோவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இவருடைய உறவினர்களான வினோத்குமார், (வயது 32), விக்னேஷ், (30) குமார் (32), முத்துப்பாண்டி (36) மற்றும் இவருடன் வேலை செய்து வரும் வெங்கடேசன் (20) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றனர். ஏரியில் குளித்து கொண்டிருந்த போது விக்னேஷ் ஏரியின் ஆழமான பகுதியில் சென்று தத்தளித்துள்ளார். இதனை பார்த்த வைரமுத்து விக்னேஷை காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்று விக்னேஷை காப்பாற்றி உள்ளார். வைரமுத்துவால் தொடர்ந்து நீச்சல் அடிக்க முடியாததால் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு வந்து ஏரியில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவர்களால் வைரமுத்துவின் உடலை மீட்க முடியவில்லை. நேற்று மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வைரமுத்துவின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News