செய்திகள்
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
ஈரோட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு வைராபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகன் சசிக்குமார் (வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி மது அருந்தி வந்தார். இதனால் சரியாக வேலைக்கு செல்லாமலும் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சசிக்குமார் தற்கொலை செய்து கொள்வதற்காக மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற சசிக்குமார், அவரது தாய் கலைசெல்வியிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.