செய்திகள்
விபத்து பலி

கந்தர்வகோட்டை அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

Published On 2020-10-12 12:41 IST   |   Update On 2020-10-12 12:41:00 IST
கந்தர்வகோட்டை அருகே சாலை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:

சிவகங்கை மாவட்டம், காடனேரி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணிசாமி (வயது 38) என்பவர் தஞ்சாவூரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புனல்குளம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் அவர்மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயம் அடைந்த அந்தோணிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தோணிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News