செய்திகள்
மாயம்

வேலூரில் இளம்பெண் மாயம்- போலீஸ் விசாரணை

Published On 2020-10-11 17:56 IST   |   Update On 2020-10-11 17:56:00 IST
வேலூரில் வேலைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
வேலூர்:

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த 5-ந்தேதி வேலைக்கு சென்ற இளம்பெண் அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உஷாலில்லி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News