செய்திகள்
குருபரப்பள்ளி அருகே வாகனம் மோதி முதியவர் பலி
குருபரப்பள்ளி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பி.டி.எம். லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஷேக்பாஷா (வயது 67). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் குருபரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டல் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.