செய்திகள்
கைது

பாணாவரத்தில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

Published On 2020-10-10 10:37 GMT   |   Update On 2020-10-10 10:38 GMT
பாணாவரத்தில் கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:

பாணாவரம் அடுத்த சூரை காலனி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரைகாலனியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 20) என்பவர் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News