செய்திகள்
விபத்து பலி

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2020-10-10 13:14 IST   |   Update On 2020-10-10 13:14:00 IST
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

ஆலங்குடியை அடுத்த பாப்பான் விடுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது50). கூலி தொழிலாளியான இவர் கடந்த 25-ந்தேதி பாப்பான் விடுதி ஆலங்குடி சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது கீழப்பட்டி ராசியமங்கலத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் நடராஜன் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News