செய்திகள்
விபத்து பலி

பேரண்டப்பள்ளி அருகே வாகனம் மோதி பொம்மை வியாபாரி பலி

Published On 2020-10-10 12:21 IST   |   Update On 2020-10-10 12:21:00 IST
பேரண்டப்பள்ளி அருகே வாகனம் மோதி பொம்மை வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

கர்நாடக மாநிலம் நகரா மாவட்டம் குளிபுரா தாலுகா சிக்கோலா டேம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 36). இவர் ஓசூரில் பேரண்டப்பள்ளியில் தங்கி பொம்மைகள் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் பேரண்டப்பள்ளி வளைவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜீவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News