செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது

Published On 2020-10-09 13:04 IST   |   Update On 2020-10-09 13:04:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி மற்றும் போலீசார் பழையபேட்டை வாணியர் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சுப்பிரமணியம் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 46), ரெயில்வே காலனி சக்திவேல் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

இதே போலீசார், காந்தி சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பாப்பாரப்பட்டியை சேர்ந்த திருப்பதி (50), காவேரி (50) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கே.ஏ.தர்கா பின்புறம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பாப்பாரப்பட்டி லோகேஷ் (37), கே.ஏ.தர்கா பகுதியை சேர்ந்த மூர்த்தி (37), அக்பர் (52) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.150-ஐ பறிமுதல் செய்தனர்.

கந்திகுப்பம் போலீசார் பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த அம்புரோஸ் (50), பர்கூர் வடிவேல் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர். நாகரசம்பட்டி போலீசார், கோவிலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த தளிஅள்ளி கதிர்வேல் (40), கோவிலூர் வெங்கடேசன் (30), ராஜா (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ. 300-ஐ பறிமுதல் செய்தனர்.

ஓசூர் டவுன் போலீசார், பார்வதி நகர் மலைக்கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த காளேகுண்டா பகுதியை சேர்ந்த ரமேஷ் (21), அலசநத்தம் சிவா (20), பார்வதி நகர் ஸ்ரீதர் (29) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர். பர்கூர் போலீசார், காரகுப்பம் ரவிச்சந்திரன் என்பவரது மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய எலத்தகிரி ராஜா (42), பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி சுப்பிரமணி (52) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர். கெலமங்கலம் போலீசார், அங்குள்ள சந்தை மைதானம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (32), அருண் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த பணம் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர். மொத்தம் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 30 பேர் கைது செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News