செய்திகள்
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட மைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மைத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட மைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மைத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தோழமை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வெங்கடாசலபதி, மஞ்சுளா, திம்மராஜ், ஹரிஷ்பாபு, கல்யாணசுந்தரம், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில், மாவட்ட பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்த பின் செயலாக்கிட வேண்டும். அதுவரை பழைய முறையிலேயே சம்பளப் பட்டியல் தயாரித்து வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.