செய்திகள்
வேலூர் காகிதப்பட்டறையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது 27). இவருடைய மனைவி சுகுணா. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு குமரனை விட்டு பிரிந்து சுகுணா தனது மகனுடன் தனியாக சென்றுவிட்டார். மனைவி, மகன் பிரிந்து சென்றதன் காரணமாக குமரன் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமரன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குமரனின் தாயார் அல்லி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.