செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2020-10-06 18:41 IST   |   Update On 2020-10-06 18:41:00 IST
பாலனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ்சேவியர் மற்றும் போலீசார், தீர்த்தம் - பூதிமுட்லு சாலையில் பாலனப்பள்ளி அருகில் உள்ள மலை குன்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது இரண்டு பேர் தப்பி ஓடினார்கள். அங்கிருந்த அத்திமுகத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 37), நெரிகம் நாகேஷ்(27), தீர்த்தம் திம்மராஜ்(30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Similar News