செய்திகள்
ஓசூர் அருகே வேன் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை
ஓசூர் அருகே வேன் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூர் சானசந்திரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). வேன் டிரைவர். இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டதால் மனமுடைந்த முருகன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் கல்லாவி காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் பெருமாள் (23). கட்டிட தொழிலாளி. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.